இலங்கை

ருமேனியாவில் தொழில் தருவதாக கூறி 300 லட்சம் ரூபாவை ஏமாற்றிய இலங்கை தம்பதி

ருமேனியா நாட்டில் தொழில் தருவதாக கூறி 300 லட்சம் ரூபாவை ஏமாற்றிய தம்பதி தேடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

புத்தளம் மாவட்டம் முழுவதும் சுமார் 300 லட்சம் ரூபாவை ஏமாற்றிய நுரைச்சோலை மற்றும் மாதம்பையில் வசிக்கும் தம்பதியே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

தொடுவாவள, சிலாபம், மாதம்பை, வென்னப்புவ, கட்டுனேரிய மாரவில ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 25 ஆண்கள் மற்றும் பெண்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.

பின்னர் மாதம்பையில் வாடகை வீட்டில் இருந்து இந்த தம்பதி தப்பி சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுவரை இலங்கை முழுவதிலும் உள்ள 16 பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த தம்பதியை கைது செய்ய பொலிஸார் தவறியுள்ளனர். இந்த இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதுகள் மற்றும் காசோலைகளின் நகல்கள் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளன.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!