இலங்கை

சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் இலங்கையிடம் விடுத்துள்ள கோரிக்கை : விவசாயத்துறை அமைச்சர்

இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகள் தமது நாடுகளில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நாடுகள் உரிய தூதரகங்கள் ஊடாக இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு அரசாங்கம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கைகளை வன விலங்கு உரிமை தொடர்பான அமைப்புகளும் ஆர்வலர்களும் சவாலுக்குட்படுத்தி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் விவசாய பொருட்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாகவும், எனினும் அவை எதுவும் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் எவரும் வழங்கவில்லை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்