இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை : வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு!

இலங்கையில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நில்வல கங்கை, ஜிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்தந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்கள் மற்றும் அப்பகுதிகளை கடந்து செல்லும் வீதிகள் மற்றும் புறவழிச்சாலைகளில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அந்த ஆறுகளில் மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களனி ஆற்றின் நீரின் ஓட்டம் தொடர்ந்தும் காணப்படுவதுடன், அவிசாவளையின் கீழ் பகுதியில் களனி ஆற்றின் சில இடங்கள் நிரம்பி வழிவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!