செய்தி வாழ்வியல்

மிதமான மது அருந்துதல் இதயத்திற்கு பாதுகாப்பானதா? ஆய்வுகள் கூறுவது என்ன?

சிறிதளவு மது அருந்துவது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று பலர் நம்புகிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, குறைந்த அளவு மது அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.

வாட்ஸ்அப் போன்றவற்றில் இதை ஆதரிக்கும் கூற்றுகளை நீங்கள் படித்திருக்கலாம்.

ஆனால் புதிய ஆய்வுகள் எந்த அளவு ஆல்கஹால் உடலுக்கு, குறிப்பாக இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த 20,000 பேரிடம் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், மிதமான அளவு ஆல்கஹால் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மது அருந்துவதில் பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை என்பதை நினைவூட்டுகிறது.

நாளொன்றுக்கு 12 கிராம் ஆல்கஹால் உட்கொண்டாலும், சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 1.25 மிமீ எச்ஜி அதிகரிக்கும் என்று ஃபோர்டிஸ் ஹிராநந்தனி மருத்துவமனையின் உள் மருத்துவ இயக்குநர் வைத்தியர் எச்டி லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில் ஃபரா இங்கிள் கூறுகிறார்.

ஒரு நாளைக்கு 48 கிராம் ஆல்கஹால் உட்கொள்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை சராசரியாக 4.9 மிமீ எச்ஜி அதிகரிக்கிறது.

வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பானங்கள் கூட இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று டாக்டர் ஃபரா மேலும் கூறினார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!