இலங்கை

கோப்பாய் சிறுமியின் மரணத்தில் திருப்பம் : அறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதம்!

கோப்பாய் திராணவெளி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சிறுமியின் மரண விசாரணைகளில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சிறுமி அவரது பாட்டியால் கொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.  சிறுமி உயிரிழந்த அறையில் இருந்து பாட்டி தமிழில் எழுதிய கடிதம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த கடிதத்தில், “எனக்கு சாக வேண்டும் போலிருக்கிறது. நான் இறந்தால் என் பேத்தி தனியாக இருப்பாள். அதனால்தான் நாங்கள் இருவரும் இறக்க முடிவு செய்தோம். எங்கள் இறப்புக்கு வேறு யாரும் காரணமில்லை…” என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கோப்பாய் திராணவெளி பகுதியில் உள்ள விடுதி அறையொன்றில் இருந்து 12 வயது சிறுமியின் சடலம் ஒன்று அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.

அங்கு அவரது பாட்டி அருகில் உள்ள மற்ற படுக்கையில் சுயநினைவின்றி இருந்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருவரும் கடந்த 9ஆம் திகதி திராணவெளி பகுதியிலுள்ள விடுதிக்கு வந்திருந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக விடுதி ஊழியர்கள் பொலிஸாருக்கு அறிவித்த போது, ​​அறையில் கட்டிலில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் பொலிசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு தூக்க மாத்திரை போட்டு இன்சுலின் ஊசி போட்டு மூதாட்டி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 63 வயது மூதாட்டி யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதுடன் அறையில் இருந்து கிடைத்த கடிதம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content