இலங்கை

கல்வியங்காடு கொலை சம்பவம் – வெளியான அதிர்ச்சி பின்னணி!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற கொலையின் பின்னணியில் 8 வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையே காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரு பெண்கள் உட்பட 8 பேர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியும் பொலிஸ் நிலையத்தில் தாயாருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று அறியக் கிடைத்துள்ளது.

கொலையான நபர் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் சித்திரவதைகள் செய்யப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவரின் உடலில் அடிகாயங்கள் காணப்படுவதுடன், அவற்றில் இரத்தக் கசிவும் காணப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனிடையே, கொலையானவரை சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் அதனை தமது கைபேசிகளில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையான நபர் நேற்று முன்தினம் அவரின் வீட்டில் சடலமாக காணப்பட்டார். அவரின் மனைவி, அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content