யாழில் இரு உணவகங்கள் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரண்டு உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டுள்ளன.
யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் கீழான பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இரு உணவகங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளன.
இதனையடுத்து யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வரை உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு கட்டளை இட்ட மேலதிக நீதவான், இரு உரிமையாளர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதித்து வழங்கியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)