இலங்கை செய்தி

ஐரோப்பா செல்ல முயன்று கடலில் தத்தளித்த 440 புகலிட கோரிக்கையாளர்களில் இலங்கையர்கள்

மோல்டாவிற்கு அருகே மத்தியதரைக்கடலில் மீட்கப்பட்ட 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் சீற்றத்தால்  நிர்க்கதியாகியிருந்த நிலையில் இந்த புகலிட கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர்.

எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் தலையீட்டுடன் இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்கள் மீன்பிடி படகில் ஏறி சுமார் நான்கு நாட்களாக புயல் சீற்றம் கொண்ட கடலில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இறுதி இரண்டு நாட்களில் அவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் உணவு என்பன கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 440 புகலிடக் கோரிக்கையாளர்களில் 8 பெண்களும், 30 சிறார்களும் அடங்குகின்றனர்.

அவர்கள் கடந்த முதலாம் திகதி லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 8 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை