ஆஸ்திரேலியாவில் 2 இலகுரக விமானங்கள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக பலி

ஆஸ்திரேலியாவில் வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாநில பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானம் பலத்த சேதம் அடைந்திருப்பதை தொடர்புடைய காட்சிகள் காட்டுகின்றன.
எனினும், மற்றைய விமானம் சேதமடையாததால், விமானி உயிர் தப்பினார்.
இரண்டு விமானங்களும் தனியாருக்குச் சொந்தமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)