இலங்கை

பிரதமர் மோடிக்கான மகஜர் இந்திய துணைதூதரகத்தில் இன்று கையளிப்பு

இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மகஜர் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதுவரகத்தில் இன்றைய தினம் கையளித்தனர்

மகஜர் கையளித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வாழ்நாள் பேராசிரியர் பொ, பாலசுந்தரம் பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார்,13வது திருத்த சட்டம் குறித்து அதனால் வந்த மாகாண சபை கட்டமைப்பினை முழுமையாக அமுல் நடத்துமாறு சிவில் சமூக பிரதிகளாக யாழ் இந்தியன் துணை தூதுவரை சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளோம்

அவர்கள் அதை டெல்லிக்கு அனுப்பி ஒரு சாதகமான பதிலை தருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் முடிந்த வரையில் 13-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்த கடிதத்தினை அனுப்பி இருக்கின்றோம்,என்றார்.

36 வருடங்கள் இந்த அரசியல்வாதிகள் 13ஐ நடைமுறைப்படுத்துவதற்குரிய நடைமுறை சாத்தியமான விடயங்கள் எதனையும் முன்னெடுக்கவில்லை குறிப்பாக இணைந்த வடகிழக்கில் அமைந்த மாகாணசபையில் ஒன்று அரை வருடங்கள் மாத்திரமே மக்கள் பிரதிநிதிகள் பங்கு பற்றினர்

See also  இலங்கை: தமிழர் பகுதியில் அதிகரிக்கும் மதுபானசாலைகள்: ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம்

பிரிந்த வடக்கு மாகாணத்தில் ஐந்து வருடம் மாத்திரம் செயற்பாட்டில் இருந்தது அந்த காலத்திலும் அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை அதிகாரங்களில் சில தடைகள் இருந்தாலும் சரியான முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்ற கவலை நமக்குள்ளது என்றார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content