ஆசியா

வடகொரியா அச்சுறுத்தல் ; ஜப்பான் கடற்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி

கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஹவாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்தது.

இந்தநிலையில் தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியை நடத்தியது.

இதன்மூலம் 3 நாடுகளும் தங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அபாயகரமான ஏவுகணைகளுக்கு எதிரான தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என தென்கொரியா தெரிவித்தது.

இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் முத்தரப்பு ஏவுகணை பாதுகாப்பு பயிற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)
See also  தெற்கு லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படை தளத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்த இஸ்ரேல் ராணுவம்
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content