பொழுதுபோக்கு

என்னம்மா நீ…? ஆப்பிள் நிறுவனத்தின் மீதே புகார் கொடுத்த ஆதி பட ஹீரோயின்…

நடிகை ஆத்மிகா பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் மீது புகார் அளித்து அந்த ஸ்கிரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆத்மிகா.

கோயம்புத்தூர் பெண்ணான இவர் சினிமாவின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது சொந்த முயற்சியால் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் அறிமுகமான முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

ஆத்மிகா நடித்த முதல் படமே ஹிட்டடித்தால், கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இந்த படம் வெளியாகாமல் முடங்கியது, நரகாசூரன் படம் வெளியாகி இருந்தால், ஆத்மிகா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்திருப்பார்.

பட வாய்ப்பின்றி தவித்து வந்த ஆத்மிகாவுக்கு கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு கிடைத்ததை அடுத்து. உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். இதன்பின் ஒரு படம் கூட கைவசம் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் விதவிதமாக புகைப்படங்களை ஷேர் செய்து வாய்ப்பு தேடி வருகிறார்.

See also  அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், ஆத்மிகா பிரபல ஆப்பிள் மொபைல் நிறுவனத்தின் மீது அதிர்ச்சி அளிக்கும் வகையில் புகார் அளித்துள்ளார்.

ஈஎம்ஐ சந்தா சரியான தேதியில் செலுத்தி, Autopay ஆஃப் செய்த பிறகும் தனது கணக்கில் இருந்து 4999 ரூபாயை எடுத்துவிட்டார்கள் என்றும், ஈஎம்ஐ சந்தா சரியான தேதியில் செலுத்த மறக்கும் சூழலில், அபராத தொகை தவிர்க்க பெரும்பாலான நிறுவனங்கள் auto pay option-ஐ வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.

ஆனால்,ஆத்மிகா ஈஎம்ஐ செலுத்திய பிறகும் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மாதா மாதா இந்த தொகை பிடித்து வருவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த ஸ்கிரீன் ஷாட்டையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் பலர் ஆப்பிள் நிறுவனத்தின் மீதே புகாரா துணிச்சலான பெண் தான் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content