நேபாளத்தில் 06 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்!
நேபாளத்தில் 06 வெளிநாட்டவர்களுடன் பயணித்த ஹெலிகொப்டர் ஒன்று மாயமாகியுள்ளது.
9NMV என்ற ஹெலிகொப்டர் ஒன்றே இன்று (ஜுலை 11) காலை காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஹெலிகாப்டர் சொலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், காலை சுமார் 10 மணியளவில் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
காணாமல் போன ஹெலிகாப்டரில் ஐந்து வெளிநாட்டவர்கள் இருந்ததாகவும், அந்த ஹெலிகொப்டரை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 4 times, 1 visits today)