இலங்கை செய்தி

திடீரென பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள் – கிழக்கு இலங்கையில் சம்பவம்

ஏறாவூர் கூட்டுறவு பெற்றோல் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப வந்த மோட்டார் சைக்கிள் திடீரென எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருளை நிரப்பிக்கொண்டு பம்ப் அருகே சில மீட்டர்கள் சென்றபோது மோட்டார் சைக்கிளின் என்ஜின் பகுதியில் இருந்து தீ பரவியது.

தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வெளியே குதித்து உயிரை காப்பாற்றினர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்தவர்கள் தீயணைப்பான்களை பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் சிசிடிவி கமெராக்கள் மற்றும் கைத்தொலைபேசியில் பதிவான விதம் கீழே…

(Visited 9 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!