ஐரோப்பா

பிரான்ஸில் உச்சக்கட்ட வன்முறை – தடுக்க தீவிரமாக போராடும் பொலிஸார்

பிரான்ஸில் நான்காவது நாளாக வன்முறை தொடர்வதால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கட்டுக்குள் கொண்டுவர 45,000 பொலிஸ் அதிகாரிகள் தயார்நிலையில் உள்ளனர்.

போக்குவரத்துச் சோதனையில் காவல்துறை அதிகாரி ஒருவர் பதின்ம வயது இளையரைச் சுட்டுக் கொன்றதை அடுத்து, அங்குப் பெரிய அளவிலான கலவரங்கள் மூண்டுள்ளன.

பாரிஸ், Marseille, Toulouse, Strasbourg போன்ற நகரங்களில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிறப்புப் படைகள், கவச வாகனங்கள் ஆகியவை சாலையில் காணப்படுவதாக அறிக்கைகள் குறிப்பிட்டன.

800க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் 2,000 வீடுகளை எரித்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

சுமார் 500 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கடைகளில் புகுந்து களவாடியதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்டிருந்த பிரஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) கலவரங்கள் தொடர்பான நெருக்கடிநிலைச் சந்திப்பை வழிநடத்த நாடு திரும்பியிருக்கிறார்.

நாட்டில் அவசரநிலையைப் பிறப்பிக்க வேண்டியதில்லை என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் நிலைமையைப் பற்றி அனைத்துக் கோணங்களிலிருந்தும் ஆராயப்படுவதாகப் பிரஞ்சுப் பிரதமர் Élisabeth Borne கூறினார்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content