ஐரோப்பா

பிரான்ஸில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

இதையடுத்து, பிரான்ஸ் மந்திரி கிறிஸ்டோபர் பெச்சு இது சக்திவாய்ந்த நிலநடுக்கம் என தெரிவித்துள்ளார். பிரான்ஸின் நிலப்பரப்பு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது மிகவும் அரிதானது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், மின்சாரம் தடைபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அப்பார்ட்மென்ட் முழுவதும் அதிர்ந்ததுடன் அது சில நொடிகள் இது நீடித்ததாகவும் தான் இருந்த 3 ஆவது மாடி மண்ணில் புதைவதாக எண்ணியதாகவும் எனத் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2000-ஆம் ஆண்டு இதுபோன்று சக்கிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!