கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!
இனம் அல்லது மதம் பேதமின்றி அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
புதிதாக கட்டப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், பொதுமக்களுக்குத் திறமையான, நம்பகமான மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவது இலங்கை பொலிசாவின் முக்கியப் பொறுப்பாகத் தொடர்கிறது என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமாரன் மற்றும் பிற அரசியல் தலைமைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதேவேளை இதன்போது முன்னர் பொலிஸ் நிலையம் கட்டப்பட்டிருந்த நிலம் அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




