இலங்கை

கோப்பாய் பொலிஸ் நிலையக் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

இனம் அல்லது மதம் பேதமின்றி அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும் என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

புதிதாக கட்டப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், பொதுமக்களுக்குத் திறமையான, நம்பகமான மற்றும் உயர்தர சேவைகளை வழங்குவது இலங்கை பொலிசாவின் முக்கியப் பொறுப்பாகத் தொடர்கிறது என்று வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வடக்கு மாகாண ஆளுநர் என். வேதநாயகம், யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமாரன் மற்றும் பிற அரசியல் தலைமைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை இதன்போது முன்னர் பொலிஸ் நிலையம் கட்டப்பட்டிருந்த நிலம் அதன் உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்