3,000 போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தவர் காலியில் கைது!
காலி பகுதியில் சட்டவிரோத போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை பொலிஸார் நேற்று (06) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து சுமார் 3,000 போதை மாத்திரைகளும், 125,000 பணமும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், கைதான நபர் ஒரு தனியார் மருந்தகத்தில் பணியாற்றுபவர் என்பது கண்டறியப்பட்டது.
ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.





