ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு சிறைக்கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு
எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வருகை தரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.,
அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய, சிறைச்சாலை விதிகளுக்கு உட்பட்டு முன்னெடுக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.




