ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு: பிரிட்டனுடன் இணைகிறது ஜேர்மன்!
ஹார்முஸ் நீரிணையில் கடல்வழி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பிரிட்டன் தலைமையிலான கடற்படைப் பணியில் இணைந்து செயல்பட ஜேர்மன் தயாராகி வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Johann Wadephul தெரிவித்துள்ளார்.
இது நேட்டோ அமைப்பின் ஒரு பகுதியாக இருக்காது என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்துடன், போலந்தில் அமெரிக்கப் படைகளை அதிகரிப்பதை வரவேற்றுள்ள Johann Wadephul, ஜேர்மனியில் நீண்ட தூர ஏவுகணைகளை நிலைநிறுத்தும் அசல் திட்டத்தை அமெரிக்கா தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
சர்வதேச பாதுகாப்பில் ஜேர்மனியின் ஈடுபாடு மற்றும் அமெரிக்காவுடனான ராணுவ ஒத்துழைப்பு என்பவற்றை சமாந்தரமாக பேணுவதற்கு ஜேர்மன் முற்படுவதை அவரது கூற்று வெளிப்படுத்துகின்றது.





