இலங்கை செய்தி

இலங்கையில்உச்சம் தொட்ட தங்க விலை

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (21) திடீர் அதிகரிப்புப் பதிவாகியுள்ளதாக
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6,000 ரூபாவினால்
அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,755 ரூபாவாகவும்,
விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்பட்ட நிலையில், இன்றைய அதிரடி விலை
அதிகரிப்பு நகை வியாபாரிகளையும் வாடிக்கையாளர்களையும் ஒருவிதப் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!