உலகம் செய்தி

ஹமாஸ் தலைவரை குறிவைத்து தாக்குதல்: காசாவில் குழந்தை உட்பட எழுவர் பலி!

காசாவின் ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தை உட்பட ஏழு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

50 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவுத் தலைவரான இஸ் அல்-தின் அல்-ஹடாத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

காசாவில் போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும், அதனைமீறும் வகையில் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.

காசாவின் பெரும்பகுதியை இஸ்ரேலியப் படைகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

போரினால் சிதைந்துள்ள காசாவை மீண்டும் கட்டியெழுப்ப பல பில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகள் சபையும் மதிப்பிட்டுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!