04 நாடுகளில் முதல் முறையாக எரிபொருள் விலையை உயர்த்திய இந்தியா!
உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட இழப்புகளில் சிலவற்றை ஈடுசெய்யும் பொருட்டு, இந்தியா நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தியுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் ($0.03) அல்லது 3% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது என்று டெல்லியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் இன்று தெரவித்துள்ளனர்.
டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 90.67 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 97.77 ரூபாயாகவும் இருக்கும்.
இது, ஒரு லிட்டர் டீசல் விலை 87.67 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 94.77 ரூபாயாகவும் இருந்ததிலிருந்து முறையே 3.4% மற்றும் 3.2% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் தொடங்கிய நெருக்கடி நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் நிமிதம் உலகளாவிய எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு $120 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. பின்னர் சுமார் $100 முதல் $105 வரை குறைந்தன.
இந்நிலையில் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக விலை உயர்வுகளிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





