BRICS வெளிவிவகார அமைச்சர்கள் டெல்லியில் மந்திராலோசனை!
டெல்லியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்தியாவில் முக்கிய கூட்டமொன்றை நடத்துகின்றனர்.
மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இக்கூட்டம் நடத்தப்படுகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அரங்கில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளின் செல்வாக்கை அதிகரிக்கவும், மேற்குலக நாடுகளின் ஆதிக்கத்திற்கு மாற்றாக பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் BRICS அமைப்பு செயல்படுகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பில், பின்னர் தென் ஆப்பிரிக்கா, எகிப்து, ஈரான் மற்றும் இந்தோனேசியா போன்ற பல நாடுகள் இணைந்துள்ளன.
தற்போதைய கூட்டத்தில் சர்வதேச விவகாரங்கள் குறித்த பொதுவான நிலைப்பாட்டை எடுப்பது மற்றும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.





