இலங்கை செய்தி

இலங்கை, பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

பெலாரசுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை, பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ் (Maxim Ryzhenkov) சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, பெலாரசும் இலங்கையும், தங்கள் உறவுகளை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்று பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு ஏற்கனவே உறுதியான பலன்களைத் தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“பெலாரசுக்கும் இலங்கைக்கும் இடையே அண்மையில் நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், இலங்கை நாடாளுமன்றத்தில் பெலாரஸ் நட்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

உங்களின் அதிகாரபூர்வ வருகையும் எமது சந்திப்பும், எமது உறவுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் உங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன,” என்றும் பெலாரஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்றும், இதில் இரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்கள் குறித்தும், அனைத்துலக தளங்களில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!