வெல்க தமிழ் ஈழம்: தமிழக சட்டமன்றத்தில் ஒலித்த குரல்!
தமிழக சட்டமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வின்போது “வெல்க தமிழ் ஈழம்” என வன்னி அரசு தெரிவித்த கருத்து சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இது தொடர்பான காணொளியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
சட்டமன்ற உறுப்பினராக சட்டரீதியாக உறுதியேற்ற பின்னர், சில கருத்துகளை முன்வைப்பார் வன்னி அரசு.
இதன்போது “ வெல்க தமிழ், வாழ்க தமிழ் நாடு, வெல்க தமிழ் ஈழம், தந்தை பெரியார் வாழ்க, எழுச்சி தமிழர் வாழ்க” என உரத்து குரல் எழுப்பினார்.
வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினராவார். திகமு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
எனினும், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விசிக ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




