உலகம் செய்தி

132 பேரை பலியெடுத்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டதா?

2022 ஆம் ஆண்டில்  சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பான மேலதிக ஆவணங்கள் கசிந்துள்ளன.

132 பேர் உயிரிழக்க காரணமான இந்த விமான விபத்து விமானிகளின் பொறுப்பற்ற செயலின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதாவது, இரண்டு விமானிகள் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசைகளில் விமானத்தைக் கட்டுப்படுத்த முயன்றிருக்கலாம் என்று விமான போக்குவரத்து நிபுணர் ஜெஃப் குசெட்டி (Jeff Guzzetti) தெரிவித்துள்ளார்.

அதேநேரம் நடுவானில் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் மேற்படி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே மேற்படி விமான விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் அல்லது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம என அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) அறிக்கை தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும் இந்த விபத்து பற்றிய இறுதி விசாரணை அறிக்கையை சீனா வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!