‘ சரிவில் இருந்து மீள்வோம்: பிரதமர் பதவியில் தொடர்வேன்’
‘ சரிவில் இருந்து மீள்வோம்: பிரதமர் பதவியில் தொடர்வேன்’
உள்ளாட்சிசபைத் தேர்தலில் லேபர் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு தாம் பொறுப்பேற்பதாக அக்கட்சியின் தலைவர் பிரதமர் Keir Starmer தெரிவித்தார்.
குறித்த தேர்தலில் திறமையான பல வேட்பாளர்கள் தோல்வி அடைந்தமை தொடர்பில் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, பிரதமர் பதவியில் தான் தொடர்வார் எனவும் Keir Starmer அறிவித்துள்ளார்.
இத்தேர்தலில் கட்சி பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் முன்னோக்கி செல்வதற்குரிய தலைமைத்துவத்தை வழங்குவதற்குரிய இயலுமை தனக்குள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.





