சரிகமபவில் பரபரப்பு: நடுவர்கள் சொன்ன வார்த்தை.. யார் அடுத்த இறுதி போட்டியாளர்?
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ள இசை நிகழ்ச்சி Saregamapa Lil Champs Season5 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
யார் அடுத்த இறுதி போட்டியாளராக தேர்வாக போகிறார் என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த வாரத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
காலம் கலந்து ஜொலிக்கும் பாடல்களுடன் “ நெஞ்சம் மறப்பதில்லை சுற்று” இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீ இல்லாத பைனலிஸ்ட் எங்க கண்ணுல படலனு எஸ். பி. சரண் கூறும் காட்சி ப்ரோமோவில் இடம்பிடித்துள்ளது. யார் அந்த இரண்டாவது பைனலிஸ்ட் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
‘சரிகமப நிகழ்ச்சி வெறும் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் மேடையாக மட்டுமல்லாமல், பல புதிய திறமைகளை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் ஒரு தளமாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள், நிகழ்ச்சியின் மூலமாகவே திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
குறிப்பாக, நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மூலமாகக் கிடைத்தப் பாராட்டுகள் பலருக்குத் திரையுலக வாசலைத் திறந்து விட்டுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.





