உள்ளுராட்சி தேர்தல் : ஸ்டாமருக்கு கடும் பின்னடைவு!
பிரித்தானியாவின் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இந்த தேர்தல் பிரதமர் கெய்ர் ஸ்டாமருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து முழுவதும் சுமார் 5,000 உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களையும், ஒரு சில மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பகுதிளில் தன்னாட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெறுகிறது.
காலை 07 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவடையவுள்ளது. அதேநேரம் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் இன்றைய தினமே ஆரம்பிக்கப்பட்டு நாளை நண்பகல் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்கள் குப்பை சேகரிப்பு, சுவரெழுத்துகள் மற்றும் சாலைக் குழிகள் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தும்.
ஆனால் இம்முறை நடைபெறும் தேர்தல் பிரதமருக்கான ஒரு பொது வாக்கெடுப்பாக எதிர்பாளர்களால் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலின் பிரதிபலிப்பு ஸ்டாமருக்கு எதிராக சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் தேசிய தேர்தலின்போது தொழிற்கட்சி தலைவர் பதவியை ஸ்டாமர் இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.





