ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணை தாக்குதல் !
ஈரானின் 03 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தொடர் திடீர் தாக்குதல்கள் காரணமாக, துபாய் மற்றும் ஷார்ஜா விமான நிலையங்களுக்கு வரவிருந்த பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாகவும், மேலும் பல விமானங்கள் மாற்று இடங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியப் பாதுகாப்பு குறித்த நிச்சயமற்ற தன்மையால், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்புப் படைகள் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




