30 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஈரான் முன்மொழிவு!
ஈரான் 30 நாட்களுக்கு போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது.
குறித்த 14 அம்ச திட்டத்தில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஈரான் மீதான தடைகளை நீக்கவும், அதன் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போர் உட்பட அனைத்துப் போர் நடவடிக்கைகளையும் நிறுத்தவும் அமெரிக்காவைக் கோருகிறது.
கடந்த வாரம் ஈரான்முன்வைத்த திட்டம் ஒன்றை ட்ரம்ப் நிராகரித்திருந்த நிலையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது




