ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் கடத்தப்பட்ட சிறுமியை தேடி தொடர்கிறது வேட்டை!

ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் கடத்தப்பட்ட சிறுமியை தேடும் பணி இன்று 4 ஆவது நாளாக தொடர்கின்றது.

சிறையிலிருந்து விடுதலையான ஜெபர்சன் லூயிஸ் என்பவராலேயே அச்சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதில் இருந்து தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.

தற்போது நான்காவது நாளை எட்டியுள்ள இந்தத் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் குதிரைப்படை வீரர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர்.

அந்தச் சிறுமி இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பும் அதிகாரிகள், அப்பகுதியின் கரடுமுரடான நிலப்பரப்பில் தேடுதலை விரிவுபடுத்தியுள்ளனர்.

காணாமல் போன சிறுமியைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!