ஐரோப்பா

உயிர் தியாகம் செய்ய அழைப்பு : சர்ச்சை பதிவால் பிரித்தானியாவில் பதற்றம்!

பிரித்தானியாவில் உள்ள ஈரானியர்கள் “தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டும்” என்று தெஹ்ரான் தூதரகம் விடுத்த அழைப்பு குறித்து பெருநகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்கள் ஆட்சிக்காகத் தியாகிகளாக மாற வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் ஒரு செய்தியைத் தூதரகத்தின் டெலிகிராம் சேனல் பதிவேற்றியதாக கூறப்படுகிறது.

Iran Embassy Telegram message

மேற்படி பதிவின் மீது நடவடிக்கை தேவையா என்பதை மதிப்பிடுவதற்காக, பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறை தற்போது  ஆய்வு செய்து வருகிறது.

அதேநேரம்  “ஜன்ஃபதா” அல்லது சுய தியாக இயக்கத்தில் சேருமாறு  மக்களை ஊக்குவித்த அந்தப் பதிவு குறித்து விவாதிப்பதற்காக, பிரித்தானியாவிற்கான ஈரான் தூதரை வெளியுறவு அலுவலகம் வரவழைத்து கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் மக்களைப் பாதுகாக்க “அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்று அரசாங்கம் கூறியுள்ளதுடன், ஈரானின் “கொடுமையான மற்றும் அடக்குமுறை ஆட்சியை” தொடர்ந்து கண்டிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!