சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் வெளிநாட்டு பயணம்!
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் Shehbaz Sharif சவுதி அரேபியா, கத்தார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அரசமுறை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
ஏபர்ல் 15 முதல் 18 வரையில் 4 நாள் பயணமாகவே அவர் மேற்படி நாடுகளுக்கு செல்கின்றார்.
துருக்கியில் நடைபெறும் அந்தல்யா இராஜதந்திர மன்ற நிகழ்வில் பங்கேற்கும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளார்.
ஏனைய நாடுகளிலும் விசேட சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சு இஸ்லாமாபாத் நடைபெறுவதற்குரிய சாத்தியம் நிலவுகின்றது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் மேற்படி விஜயம் இராஜதந்திர வட்டாரத்தில் முக்கியத்துவம்மிக்கதாகக் கருதப்படுகின்றது.





