உலகம் செய்தி

மத்திய கிழக்கிலிருந்து ட்ரம்புக்கு அழைப்பை ஏற்படுத்திய பிரிட்டன் பிரதமர்: நடந்தது என்ன?

பிரிட்டன் பிரதமரின் Keir Starmer வளைகுடா நாடுகளுக்கான விஜயமானது முக்கியமானதொரு இராஜதந்திர நகர்வாகக் கருதப்படுகின்றது.

முதலில் சவுதி அரேபியாவுக்கு சென்ற Keir Starmer , அந்நாட்டில் முக்கியத்துமிக்க கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் நேற்று ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். மேற்படி நாடுகளிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

குறிப்பாக வளைகுடா நாடுகள்மீதான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறப்பதற்கான முக்கியத்துவம் குறித்து நாட்டுத் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, கடல்வழிப் போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் ஊடாக உரையாடிய Keir Starmer, கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டுத் திட்டங்கள் குறித்து ஆலோனை நடத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!