நட்பு நாடுகள் அமெரிக்காவிற்கு முழு ஆதரவு அளிக்கின்றன – நேட்டோ
அமெரிக்காவின் ஈரானுடனான போர் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் விரைவாக ஆதரவு வழங்குவதாக நேட்டோ தலைவர் ரூட்டே, தனது உரையில், வலியுறுத்தியுள்ளார்.
ஆரம்ப கட்டத் தாக்குதல்களில் நட்பு நாடுகள் சில சற்று மெதுவாக செயற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களை முன்னறிவிப்பு இன்றி அமெரிக்கா மேற்கொண்டது. ஆனால், தற்போது ஐரோப்பா முழுவதும் நாடுகள் மிகப்பெரிய அளவிலான ஆதரவை வழங்குகின்றன என்று ரூட்டே தெரிவித்தார்.
ஹார்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதில் நாடுகளின் கூட்டணியை வழிநடத்தியதற்காக பிரித்தானியாவையும்
அவர் பாராட்டினார்.
“சுமார் விதிவிலக்கின்றி, அமெரிக்கா கேட்கும் அனைத்தையும் நட்பு நாடுகள் செய்து வருகின்றன, இது ஒரு மனநிலை மாற்றத்திற்கான சான்றாகும்.” என்றும் நேட்டோ தலைவர் தெரிவித்துள்ளார்.




