மத்தியக் கிழக்கில் இருந்து விமான சேவைகள் எப்போது தொடங்கும்?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பஹ்ரைனிலிருந்து விமானச் சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்படும் என கல்ஃப் ஏர் அறிவித்துள்ளது.
எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ் மற்றும் கத்தார் ஏர்வேஸ் போன்ற முக்கிய மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் படிப்படியாக தங்கள் செயல்பாடுகளை மீட்டெடுத்து வருகின்றன,
ஆனால் சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கும் நேரடி விமானப் பாதைகளை மீண்டும் தொடங்குவதற்கும் கால அவகாசம் தேவைப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் ஜெட் எரிபொருளுக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறை உருவாகி வருகிறது.
உள்கட்டமைப்பு சேதம் மற்றும் அதிகரித்த தேவை காரணமாக விநியோகப் பிரச்சினைகளும், அதிக விலைகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக விமான கட்டணங்கள் அதிகரிப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





