உலகம்

அமேசான் காட்டில் தொலைந்த குழந்தைகள் 40 நாட்களின் பின்னர் மீட்பு

கொலம்பியாவின் அமேசான் காடுகளில் விமானம் விபத்துக்குள்ளானதில் 40 நாட்களுக்குப் பிறகு 4 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மே 1 ஆம் திகதி, 6 பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு சிறிய ரக விமானம் கொலம்பியாவில் இருந்து புறப்பட்டு அமேசான் காட்டில் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானத்தில் பயணித்த சிறுவர்களின் தாய், விமானி உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில், லெஸ்லி ஜேகோபோம்பேர் (13), சோலோனி ஜெகோபோம்பேர் (9), டியன் ரனோக் முகுடி (4)மற்றும் கைக்குழந்தையான கிறிஸ்டின் ரனோக் ஆகிய நால்வரும் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தனர்

குழந்தைகள் உயிருடன் இருப்பதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலம்பிய அதிபருக்கு தகவல் கிடைத்ததும், “என்ன நடந்தாலும் சரி, எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, குழந்தைகளை மீட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து சிறுவர்களை தேடும் பணியில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டது

அதுமட்டுமின்றி குழந்தைகளை பற்றி பாட்டி பேசிய சில வார்த்தைகள் ஒலிபெருக்கி மூலம் காடு முழுவதும் ஒளிபரப்பட்டது.

தேடுதலின் போது குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாததால், தேடுதல் பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர் உள்ளூர் பழங்குடியின மக்களின் உதவியை நாடினர்.

இந்நிலையில் பழங்குடியினரின் உதவியுடன் 40 நாட்களுக்கு பிறகு 4 சிறுவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இதனை கொலம்பிய அதிபர் பெட்ரோ தனது ட்விட்டர் மூலம் உறுதி செய்துள்ளார்.

அமேசான் காட்டில் 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதற்கு அந்நாட்டு மக்கள் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்