ட்ரம்புக்கு எதிராக பாரிய போராட்டம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக பெருமளவிலான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
தன்னிச்சையான இராணுவ நடவடிக்கைகள், கடுமையான குடிவரவு சட்டங்கள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் போன்ற காரணங்களால் இந்த எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற அனுமதியின்றி எடுக்கப்படும் முடிவுகள் நாட்டின் ஜனநாயக மாண்புகளை சிதைப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, ஈரானுடனான போர் பதற்றமும் எரிபொருள் விலை உயர்வும் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் போராட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.




