லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் -பல வீடுகள் சேதம்
லெபனானில் பல பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், முக்கியமான பாலமொன்றும் இலக்குவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
களப்பணியாளர்கள் வழங்கிய தகவலின்படி, லெபனானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹெர்மல் (Hermel) பகுதியில் வான்வழித் தாக்குதல்
இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, டல்ஃபா (Talfa) பாலம் மீதும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





