மூளைக்காய்ச்சல் பரவல் கணிசமானளவு குறைந்துள்ளதாக தகவல்
கேன்டர்பரி (Canterbury) பகுதியில் மூளைக்காய்ச்சல் (Meningitis) பரவல் கணிசமானளவு குறைந்துள்ளதாக பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமை (UKHSA) தெரிவித்துள்ளது.
கென்ட் (Kent) பகுதியில் மொத்தம் 29 பேர் மூளைக்காய்ச்சல் பாதிப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரவலுக்கு எதிராக நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தகுதியுள்ள நபர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கும் நான்கு மருத்துவ மையங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
பொதுச் சுகாதார சேவைகளின் தகவலின்படி, 9,300 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்
மேலும் 12,700 பேருக்குத் தடுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.
உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய மூளைக்காய்ச்சல் (Meningitis) பரவல் காரணமாக கென்ட் பகுதியில் இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது




