தாக்குதல்கள் தீவிரம்: அடுத்த கட்டத்துக்கு செல்கிறது போர்!
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது.
ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்தியத்தின் எரிசக்தி வசதிகள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்றும், இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் ஈரான் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது ராணுவக் கொள்கையைத் தற்காப்பு நிலையிலிருந்து தாக்குதல் நிலைக்கு மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளதுடன், அமெரிக்காவின் இந்த மிரட்டல் அதன் பலவீனத்தையே காட்டுவதாக ஈரான் ஊடகங்கள் விமர்சித்துள்ளன.





