மீண்டும் ‘பேய்’ படம்!
இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, Sundar C மீண்டும் பேய்க் கதையொன்றில் நடிக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
இப்படத்துக்கான படப்பிடிப்பு எதிர்வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ளது.
‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை மீண்டும் இணையும் படத்தை மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.ராம் பிரசாத் குறித்த ஒளிப்பதிவு செய்கிறார்.
திகில் நிறைந்த பேய் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும என்று தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.




