தெற்கில் நால்வரை பலியெடுத்த கோர விபத்து: ஐவரின் நிலைமை கவலைக்கிடம்!
அம்பலாங்கொடை, கதிர்காமம் பிரதான வீதியில் வீரவில பகுதியில் இன்று (17) இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். 30 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இரு இ.போ.ச. SLTB பஸ்கள் நேருக்கு நேர் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.





