நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் மிரட்டல்: சீனாவுக்கும் எச்சரிக்கை!
“ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நேட்டோ Nato உறுப்பு நாடுகள் ஒத்துழைக்கத் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும்.”
இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், நிலைமையைத் தீர்ப்பதில் சீனா ஒரு பங்கை வகிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அது நடக்கவில்லை என்றால் சீன ஜனாதிபதியுடன் நடைபெறவிருக்கும் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஈரான் போர் நிறுத்தத்தை கோரவில்லை எனவும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வேண்டிய தேவை எழவில்லை எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





