உச்ச தலைவர் உயிருடன் இருந்தால் சரணடைவதே ஒரே வழி: ட்ரம்ப் வலியுறுத்து!
ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
“உயிருடன் இல்லை என்றே எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சிலவேளை அவர் உயிருடன் இருந்தால்கூட தனது நாட்டுக்கு ஏதேனும் செய்ய விரும்பினால் சரணடைய வேண்டும்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றது. விதிமுறைகள் இன்னும் திருப்திகரமாக இல்லை. அணு சக்தி திட்டங்களை ஈரான் முழுமையாக கைவிட வேண்டும் ட்ரம்ப மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, தமது நாட்டின் புதிய உச்ச தலைவர் நலமுடன் இருக்கின்றார் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது.
எனினும், அவர் பொதுவெளியில் தோன்றாமல், அறிக்கை மட்டும் வெளியிட்டமை தொடர்பில் பல கோணங்களில் கேள்விகள் எழுப்பட்டுவருகின்றன.





