உலகம் செய்தி

ஹிஸ்புல்லா அமைப்புக்கு இஸ்ரேல் மரணப் பொறி: லெபனானில் உக்கிர தாக்குதல்!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை முடக்கும் நோக்கில் இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அந்த நாட்டின் தலைநகரம் Beirut மற்றும் முக்கியப் பகுதிகளில் உள்ள ஆயுதக் கிடங்குகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இந்தப் போர் நடவடிக்கையால் லெபனானில் சுமார் எட்டு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி பெரும் மனிதாபிமான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.

அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க இஸ்ரேல் துண்டுப் பிரசுரங்கள் மூலம் லெபனான் மக்களிடம் ஆதரவு கோருகிறது.

இந்தத் தீவிரமான மோதலால் லெபனான் சமூகத்தில் பிளவுகள் அதிகரித்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பாகவே ஹிஸ்புல்லா விளங்குகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!