ரஷ்யாவில் 60 அடி ஆழமான ஏரியில் மூழ்கிய பேருந்து – 07 பேர் உயிரிழப்பு!
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள உறைந்த பைக்கால் ஏரியில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீன சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த ஏரியானது சுமார் 60 அடி ஆழம் கொண்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏரியின் மேற்பரப்பில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பனிக்கட்டி வெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.





