ட்ரம்பின் பிடிவாதம் : பாதிக்கப்படும் உலகளாவிய நாடுகள்!
அமெரிக்க உச்ச நீதிமன்றம் பொருளாதார அவசரச் சட்டத்தின் கீழ் விதித்த வரிகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்ததை அடுத்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான தற்காலிக உலகளாவிய வரி விகிதத்தை மேலும் அதிகரிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த அவர், நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதற்கமைய நாடுகள் மீதான 10% உலகளாவிய வரியை 15 சதவீதமாக உயர்த்துவேன் என்று தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த செயற்பாடு உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள நாடுகளை வெகுவாக பாதித்துள்ளது.




